Tuesday, November 24, 2009
வரவில்லை
கடிதம் எழுத நினைத்தேன்
கை வரவில்லை!
கவிதை சொல்ல நினைத்தேன்
வாய் வரவில்லை !
நெருங்கி வர நினைத்தேன்
கால் வரவில்லை !
தூங்கையில் நினைத்தேன்
தூக்கம் வரவில்லை !
சாப்பிட நினைத்தேன்
பசி வரவில்லை !
இவை மட்டும்தானா
வரவில்லை ?
கடைசியில்
கிளம்பி நிற்கையில்
வந்து விடுவேன் என்று சொன்ன
நீயும்தான் வரவில்லை ........
படம் : இணையத்திலிருந்து
Friday, November 13, 2009
தொட்டாச் சிணுங்காக் காதல்
பொய்யான கோபங்களும்
சின்னச் சின்ன தாபங்களும்
அதீதமான வியப்புக்களும்
அபத்தமான பேச்சுக்களும்
ஆழமான தேடலும் கொண்ட
நிஜமான காதல் !
இது
நிழல் மனிதர்கள் தொடர்ந்தாலும்
நெருஞ்சி முற்கள் நெருடினாலும்
கருங்கற்கள் இடறினாலும்
காயம்பட்டு நொந்தாலும்
தொடர்ந்து செல்கின்ற
தொட்டாச் சிணுங்காக் காதல் !
அவள் பார்க்கிறாளா என்று அவன் பார்ப்பதையும்
அவன் பார்க்கிறானா என்று அவள் பார்ப்பதையுமே
தமக்குப்
பார்வை கிடைத்ததன்
பயனாக உணர்கிறார்கள் !
மாலையிலே பிரிந்து
மனைக்கு செல்கையில்
மனையில் ஏறி
மாலை சூடும் நாளை நினைத்து ஏங்குகிறார்கள் !
இரவுப் பொழுது
எப்படி நகரப் போகிறது என்று
பயந்து தூங்காமலே தூங்குகிறார்கள் !
அவன் யார் ? அவள் யார் ?
முழுவதும் அறியும் முன்னே
முன்னுரை வரைகிறார்கள் !
தன் வீடு எதிரியின் குகையாகிறது !
தன் சொந்தம் கொடும் பகையாகிறது!
எதிர் பால் நீ இருக்கையிலே
எதிர்ப்பார் தேவையில்லை என்கிறது !
பல்லியைப் பார்த்து அவள்
பயப்படுகையிலே
பல்லியைப் பிடித்து
பயில்வான் பேர் வாங்கி
பல்லிளிக்கத் தோன்றுகிறது !
இத்தனை வருடம் இல்லாமல்
திடீரென்று
காசு கொடுத்து
கிரீட்டிங் கார்டு வாங்கத் தோன்றுகிறது !
கவிதையென்ற பெயரில்
கன்னாபின்னாவென்று
கிறுக்கத் தோன்றுகிறது !
காதல் -
தோணக் கூடாததைஎல்லாம்
தோணச் செய்கிறது !
தோணுவதை எல்லாம்
தேடச் செய்கிறது !
யூத் விகடனில் படிக்க
படம் இணையத்திலிருந்து
Wednesday, November 4, 2009
ஏழைத் தாய்
Subscribe to:
Posts (Atom)