
நாற்பதாண்டுகளுக்கு முன்
நீ
கண்டக்டர் -
ஆனால்
இன்றைக்கும்
உம் காந்தக்
கண் டக்கர் !
உனக்கு
எந்த ஸ்டேஜில்
நிறுத்த வேண்டும்
என்றும் தெரியும் !
எப்போது
"போலாம் ரைட்" என்று
டபுள் விசில்
கொடுக்கவேண்டுமென்றும்
தெரியும் !
நீ அகலக்கால் வைத்துவிட்டு பின்பு
யாசிப்பது இல்லை !
ஆனால்
வைத்த கால் அகலக்கூடாது
என்பதற்காக நிறைய
யோசிப்பது உண்டு !
நீ
உன் முதுகில்
குத்தும்
அம்புகளையும்
நம்புபவன் !
எவர்
நட்டமடைந்தாலும்
மனம்
வெம்புபவன் !
உன்
யதார்த்தமான
சிரிப்புக்குக் கூட
ஏதேதோ அர்த்தம்
கற்பிக்கப்படும் !
உன்
சாதாரண
வார்த்தைகளுக்குக் கூட
பொழிப்புரைகளும் தெளிவுரைகளும்
பொங்கி வரும் !
நீ
வம்பே வேண்டாமென
விட்டுக் கொடுத்தால்
வானம் பார்க்கும்
வாயில்லா ஜீவன்களுக்குப்
போட்டி வரும் !
வண்டி வண்டியாய்
பேட்டி வரும் !!
அதெப்படி
உன் அசைவில் உதிர்ந்த
கனிகளை மடியில்
கட்டிக் கொண்டே
கல்லெறியத்
துடிக்கின்றன
பல கைகள் ?
அது ஏன்
உன் வாக்கு ஸ்தானத்தை
மட்டுமே
உற்று நோக்குகின்றன
பல்லாயிரம்
ஏழாம் பார்வைகள் ?
நீ
நின்றால் குற்றம்
உட்கார்ந்தால் குற்றம்
என்று
பல பேர் குதிக்கிறார்கள் !
ஏனென்றால்
அவர்களுக்குப் பயம்
நீ
ஒருநாள்
நிற்க வேண்டிய இடத்தில்
நின்று
அமர வேண்டிய இடத்தில்
அமரப் போகிறாய் என்று !
நீ
வெற்றி மாலைகளை
தோள்களில் ஏற்பதில்லை !
ஏனெனில்
கணப் பொழுதில் அவற்றை
உன் சகாக்களின்
கழுத்துக்கு
மாற்றி இருப்பாய் !
உன் சகாக்களோ
தோல்வியையே
ருசித்ததில்லை !
ஏனெனில்
இமைப்பொழுதில்
முன்னே வந்து
சூழ்ச்சிக் கத்திகளை
நீ மட்டும்
மார்பில் சுமப்பாய்..!
இதில் அதிசயம்
ஏதுமில்லை !
ஏனெனில்
நீ அந்த
அருணாச்சல நீலகண்டனின்
பக்தன் அல்லவா ?
எங்கள் தலைவனே !
நீ
கூட்டமான பேருந்திலும்
இப்படி நுழைந்து
அப்படி வெளியேறி விடுவேன்
என்று இனியும்
பெருமைப்பட்டுக் கொள்ளாதே !!
உள்ளே நுழைந்த
நீ
வெளியேற முடியாத
இடம் ஒன்று உள்ளது...
அது
எங்கள் இதயம் !!!
வாழ்க ரஜினி....