Monday, November 21, 2011

பதினொரு மாதங்கள் பதினொரு நாட்களுக்குப் பின்



பதினொரு மாதங்கள்
பதினொரு நாட்களுக்குப் பின்..
இந்தப்
பதியனில்
பதிக்கும் முயற்சி

இம்முறை
தொடர்ந்து
மலர வேண்டும்
என்ற எதிர்பார்ப்பு
உள்ளுக்குள்

காலச் சூழ்நிலையும்
காலன் நிகழ்த்திய
பேய்க் காற்றும்
ஓய்ந்து விட்டதுபோல்
ஓர் உணர்வு

தாழ் விலக்கி
வெளிவர
கதவருகில் துடிக்கும்
கனவுகள்

என்னத்தாலோ
கட்டுப்படுத்தப்பட்ட
சுருக்கு நெகிழ்ந்த
எண்ணத் தாள்கள்

துளிர்க்கத்
துடிக்கும்
தூரிகை முனை

இறைவா
இது தொடர்ந்திட
துணையாய்
தொடர்ந்திடு.

படம் : இணையத்திலிருந்து