Tuesday, November 24, 2009

வரவில்லை


கடிதம் எழுத நினைத்தேன்
கை வரவில்லை!

கவிதை சொல்ல நினைத்தேன்
வாய் வரவில்லை !

நெருங்கி வர நினைத்தேன்
கால் வரவில்லை !

தூங்கையில் நினைத்தேன்
தூக்கம் வரவில்லை !

சாப்பிட நினைத்தேன்
பசி வரவில்லை !

இவை மட்டும்தானா
வரவில்லை ?

கடைசியில்
கிளம்பி நிற்கையில்
வந்து விடுவேன் என்று சொன்ன

நீயும்தான் வரவில்லை ........


படம் : இணையத்திலிருந்து

10 comments:

க.பாலாசி said...

//கடைசியில்
கிளம்பி நிற்கையில்
நீயும்தான் வரவில்லை ........//

கூப்பிட்டு பார்த்தீர்களா?.....

நல்ல கவிதை...படமும் அருமை....

ராமலக்ஷ்மி said...

//கடைசியில்
கிளம்பி நிற்கையில்
வந்து விடுவேன் என்று சொன்ன

நீயும்தான் வரவில்லை ........//

நன்றாக உள்ளது ஈ ரா:))!

vasu balaji said...

கவிதையைப் பிரிய மனம் வரவில்லை
டேமேஜர் புண்ணியத்தில் தமிழ்மணம் கை வரவில்லை
வீட்டில போய் அமுக்குறேன் ஈ.ரா.
கவிதை அருமை.

vasu balaji said...

தமிழ்மணம் போட்டாச்சி 2/2

கலகலப்ரியா said...

=))... mm...ennannamo thonuthe... mm.. nallaarukku...!

V.N.Thangamani said...

கவிதை அருமை
நன்றி ஈ ரா
வாழ்க வளமுடன்.

அன்புடன் மலிக்கா said...

கவிதை மிக அருமை.. கலக்குங்க. படிச்ச படிக்காதவன்...

R.Gopi said...

ஈ.ரா. அவர்களே

தமிழ் விளையாடுகிறதே ஐயா....

நானும் :

உங்களை போல் எழுத நினைத்தேன்
ஆனால், எழுத தான் முடியவில்லை

சிங்கக்குட்டி said...

நல்ல கவிதை ஈ ரா :-)

thiyaa said...

அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.html

Post a Comment