Monday, February 2, 2009

கான மயிலாட கண்டிருந்த வான்கோழிகள்....



அது ஒரு காலம்...

பாடகர்களும் நடன வித்தகர்களும் மட்டுமே திரைத்துறையில் சாதிக்க முடியும் என்று இருந்த நிலை..

அப்பொழுது மேற்கூறிய இரண்டிலுமே போதிய திறமை இல்லாத இரு பெரும் ஜாம்பவான்களாக எம்.ஜி இராமச்சந்திரனும் சிவாஜி கணேசனும், கால் பதித்து.. தமது நாடக அனுபவங்களை மட்டுமே அஸ்திவாரமாகப் போட்டு தமிழ் திரையுலகின் புதிய பரிமாணக் கட்டிடத்தை எழுப்பத் தொடங்கினார்கள்.

தங்களுக்கு என்று ஒரு தனிப் பாதையையும் திறமையையும் கொண்டிருந்த அந்த சிங்கங்கள் யாரையும் வழிகாட்டியாகக் கொள்ளவும் இல்லை.. யாரையும் பிரதி எடுக்கவும் இல்லை... இருதுருவங்களுக்கும் தனித்தனி எல்லை.. தனித்தனி சாம்ராஜ்யம்... என்று வகுத்து இருபது ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகின் மன்னர்களாக விளங்கினார்கள்.

எல்லா சகாப்தத்துக்கும் ஒரு வயதும் எல்லையும் உண்டு என்ற உலக நியதிப்படி அவர்களின் திரையுலக காலமும் எழுபதுகளின் ஆரம்பத்தில் நிறைவு பெறத் தொடங்கியது.. அந்த நேரத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முயன்ற ஜெய் ஷங்கர், ரவி சந்திரன், முத்துராமன் போன்றவர்கள் நல்ல நடிகர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருந்த போதிலும் மக்கள் திலகத்தையும் நடிகர்திலகத்தையும் போல் முதல் இடங்களைப் பிடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா சக்தியாக இடம் பிடிக்க முடியவில்லை..

ஏறக்குறைய ஏழெட்டு ஆண்டுகள் இப்படி நகர்ந்த போது, தமிழ் திரையுலகம் பாலச்சந்தர், ஸ்ரீதர் போன்ற இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. நடிகர்களையும் மீறி இயக்கம் என்பதன் வலிமை உணரப்பட்டது. கதாநாயக துதி பாட்டில் இருந்து கதை அம்சத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நல்ல கதைகளும், நல்ல நடிகர்களும் கிடைக்கப் பெற்றது தமிழ் திரையுலகம்..

இந்த சூழ்நிலையில் தான் கேபியால் பட்டை தீட்டப் பட்டார்கள் ரஜினியும், கமலும். என்னதான் திறமை சாலிகளாக இருந்தாலும், அவர்கள் இருவரும் ஒருவேளை பத்து ஆண்டுகள் முன்னாலேயே கதாநாயகர்களாக அறிமுகம் ஆகி இருந்தால் மக்கள் திலகத்துக்கும் நடிகர் திலகத்துக்கும் முன்னால் நிலைத்து நின்று இருக்க முடியுமா அல்லது அப்படியே இருந்தாலும் இவர்கள் திறமைக்கு அந்த தலைமுறை ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து இருப்பார்களா என்பதும் சந்தேகமே.

ஆண்டவன் அருளால் அவர்களுக்கு ஒரு சரியான இடைவெளி கிடைத்தது.. இரண்டு பெரும் நட்சத்திரங்களும் போதும் என்று அவர்களாகவே வேறு முறைக்கு தங்களை தயார் படுத்திக் கொண்ட பின், சில ஆண்டுகள் கழித்து வந்ததால், மக்கள் புதுமையை ஏற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பும் ஏற்பட்டது. இதை ரஜினி கமல் இருவருமே உணர்ந்து இருந்ததால், எந்த சூழ் நிலையிலும், தங்கள் முன்னோடிகளை பரிகசித்தோ அல்லது அவர்களை பின்பற்றியோ நடிக்காமல் புது வழியைக் கண்டார்கள்.. வெற்றியும் பெற்றார்கள்..

பல நேரங்களில் அவர்கள் இருவரின் ரசிகர்களின் மோதல்கள் நடைபெற்றன.. அது ஒன்றும் புதியது அல்ல.. ஏற்கனவே எம்ஜியார், சிவாஜி ரசிகர்கள் போடாத சண்டையும் அல்ல.... ஆனால் ரஜினியும் கமலும் என்றைக்கும் எம்ஜியார் - சிவாஜியுடன் போட்டி போட்டது இல்லை.. போட்டு இருக்கவும் முடியாது.. ஏனெனில் அவர்கள் வளர்ந்தார்கள், வளர்க்கப் படவில்லை... திரையில் ஆடினார்கள் - வாழ்க்கையில் பிறரால் ஆட்டுவிக்கப் படவில்லை..

தங்கள் திறமைக்கும் தகுதிக்கும் மீறி தாங்களே தங்களை அடுத்த எம்ஜியார் என்றோ அடுத்த சிவாஜி என்றோ சொல்லிக்கொள்ளவில்லை.. மக்களாகவே பார்த்து இவர் அவருக்கு மாற்று... என்று முடிவு செய்தார்கள்.. அவர்களின் இடங்கள் ஓரிருவரால் முடிவு செய்யப்படவில்லை... ஓரிரு படங்களாலும் முடிவு செய்யப்படவில்லை... ஓரிரு ஆண்டுகளினாலும் முடிவு செய்யப்படவில்லை...

ஆனால் இன்றைக்கும் ரஜினியின் சிவாஜி படத்தின் சாதனையையும் கமலது தசாவதாரத்தின் சாதனையையும் நெருங்கக் கூட முடியாத அல்லது நினைக்கக் கூட முடியாத நிலையில் இருக்கும் போதே அவர்களையும் தாண்டி, அதற்கும் முன்னால் இவர்கள் பிறந்தே இருக்காத காலத்தில் கொடி கட்டிப் பிறந்தவர்களின் பிம்பம் நான்தான் என்று தாங்களே தமுக்கடிக்கும் நடிகர்களை நினைத்தால் இவர்கள் எதோ மனோ வியாதியில் இருக்கிறார்களோ என்று பச்சாதாபம்தான் தோன்றுகிறது...

ரஜினியின் தோல்விப் படத்தை விட இவர்களின் வெற்றிப் பட வசூல் குறைவு என்பதும் தமிழ் நாட்டை தாண்டினால் இவர்கள் யாரென்றே தெரியாத நிலையில் இருக்கும் போதே இவர்களுக்கு இவ்வளவு ஆற்றாமை என்றால், தொடர்ச்சியாக ஒரு ஐந்து ஆண்டுகள் வெற்றி படங்களையே கொடுத்தால் இவர்கள் என்ன ஆட்டம் போடுவார்கள் என்று நினைத்து பாருங்கள்? ஒரு பழமொழி சொல்வார்கள், ஆட்டுக்கு வால் அளந்து வைத்தான் என்று. கடவுளுக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும் யார் யாருக்கு எந்த இடம் எப்பொழுது கொடுக்கப் பட வேண்டும் என்று.. அதை விட்டு விட்டு வில்லை எடுத்தவன் எல்லாம் ராமன் ஆகி விடலாம், பறப்பது எல்லாம் பருந்து ஆகிவிடலாம் என்று நினைத்தால் காலம் உங்களைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கும்..

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைந்தவர்களின் பட்டியலில் இன்னொரு அத்தியாயம் எழுதப்பட்டு பிற்கால சந்ததிக்கு, உங்களை அறியாமலே நீங்களே எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு வழி காட்டியாகி விடுவீர்கள்... அதையாவது செய்து தொலையுங்கள், பிறந்ததுக்கு ஒரு பிரயோஜனமாவது இருக்கட்டும்....

அன்புடன்,

ஈ ரா

2 comments:

Anonymous said...

Title a பார்த்து இதுல என்ன விஷயம் இருக்க போக்துதுன்னு நினைச்சேன்.. பட்டய கிளப்பிட்டீங்க போங்க...
ஊர் குருவி நடிகருக்கும்.. கேட்ட பயலுக்கும் இது பாடமா அமைஞ்சிற கூடாது.. ஏன்னா எதிர்கால நடிகர்களுக்கு இவங்க கண்டிப்பா பாடமா ஆகணும்..

ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது
வெட்டி சீன் வேலைக்கு ஆகாது

பஹ்ரைன் பாபா

ஈ ரா said...

thanks bahrain baaba for your visit,

anbudan

ee raa

Post a Comment