இறையருள் கூடித் தமிழுடன் கலந்து
உயிர் மெய்யாகி உலகை ரசித்திட
அன்பு என்னும் ஆய்தம் ஏந்தி
அடியவர் நங்கள் அடிஎடுக்கிறோம்!
தளிர் நடை பயிலும் சிறியவர் எம்தம்
பிழைகளை எல்லாம் மழலையாய் கொள்வீர்!
நாங்கள் -
குறுகிய எண்ணம் எனும் குறில் தவிர்த்து
அறத்திலும் திறத்திலும் நெடிலாய் நிமிர்ந்திட
ஒற்றும் குற்றும் ஒதுக்கியே தள்ளி
இரட்டைக் கிளவியாய் என்றும் வாழ்ந்திட
வையத்தில் உயர் உத்தமர் நும் தம்
வாழ்த்தினை எமக்குத் துணையாய்த் தருவீர் !
உணர்வும் ஆக்கமும்
மகா - ஈ ரா
3 comments:
வாழ்த்துக்கள் ஈ ரா .. :-)
Wish u a Satisfied Married Life
அன்பின் ராம்ஸ்,
வாழ்த்துக்கள்....
Post a Comment