Tuesday, July 7, 2009

எனது திருமணத்தை வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி..
















இறையருள் கூடித் தமிழுடன் கலந்து
உயிர் மெய்யாகி உலகை ரசித்திட
அன்பு என்னும் ஆய்தம் ஏந்தி
அடியவர் நங்கள் அடிஎடுக்கிறோம்!
தளிர் நடை பயிலும் சிறியவர் எம்தம்
பிழைகளை எல்லாம் மழலையாய் கொள்வீர்!

நாங்கள் -

குறுகிய எண்ணம் எனும் குறில் தவிர்த்து
அறத்திலும் திறத்திலும் நெடிலாய் நிமிர்ந்திட
ஒற்றும் குற்றும் ஒதுக்கியே தள்ளி
இரட்டைக் கிளவியாய் என்றும் வாழ்ந்திட
வையத்தில் உயர் உத்தமர் நும் தம்
வாழ்த்தினை எமக்குத் துணையாய்த் தருவீர் !

உணர்வும் ஆக்கமும்

மகா - ஈ ரா

3 comments:

கிரி said...

வாழ்த்துக்கள் ஈ ரா .. :-)

harisivaji said...

Wish u a Satisfied Married Life

Shankar said...

அன்பின் ராம்ஸ்,
வாழ்த்துக்கள்....

Post a Comment